20 நவ., 2010

பழமொழி' கலாய்ப்புகள்!

 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!
- இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது?
 வேலிக்கு ஓணான் சாட்சி!
- இதெல்லாம் ரொம்ம ஓவர். எந்த ஓணான் கோர்ட் படியேறி சாட்சி சொல்லியிருக்கு?
 தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை!
- ஏன் தகப்பனை போல பிள்ளையே கிடையாதா? நூல் மாதிரி சேலை இருந்தா யாரு கட்டுவாங்க ரோம்ப அடுக்குறாங்கப்பா!
 ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
- பானைக்கு சரி! குக்கர், ரைஸ் குக்கர் இதுக்கெல்லாம் எப்படி? பதத்தை அதுவே பாத்துக்கும்! பானையை கொஞ்சம் கவுத்து வைங்க!
 சின்ன புள்ள வெள்ளாமை வந்து சேராது!
- தெரியுதுல்ல... அப்புறம் எதுக்கு குழந்தை தொழிலாளர் முறை? படிக்க வைங்கய்யா!
 தென்னைய பெத்தா இளநீரு! பிள்ளைய பெத்தா கண்ணீரு!!
- பெறவேண்டியதுதானே..! தென்னை வந்து பொறந்து வளர்ந்து இளநீரு குடுக்கும்! ஆகுற பேச்சை பேசுங்க! கண்ணீரு... நம்ம பரம்பரை சொத்து! வருத்தப்படாத பெருசு... நாங்கதான் பொறப்போம்!
 சேரிடம் அறிந்து சேர்!
சொல்லீட்டீங்க! சரியான காலேஜா பார்த்துதான் சேர்றோம்! ம்... வேலைதான் சேர முடியலே தலைவா!

பழமொழி' கலாய்ப்புகள்!

 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!
- இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது?
 வேலிக்கு ஓணான் சாட்சி!
- இதெல்லாம் ரொம்ம ஓவர். எந்த ஓணான் கோர்ட் படியேறி சாட்சி சொல்லியிருக்கு?
 தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை!
- ஏன் தகப்பனை போல பிள்ளையே கிடையாதா? நூல் மாதிரி சேலை இருந்தா யாரு கட்டுவாங்க ரோம்ப அடுக்குறாங்கப்பா!
 ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
- பானைக்கு சரி! குக்கர், ரைஸ் குக்கர் இதுக்கெல்லாம் எப்படி? பதத்தை அதுவே பாத்துக்கும்! பானையை கொஞ்சம் கவுத்து வைங்க!
 சின்ன புள்ள வெள்ளாமை வந்து சேராது!
- தெரியுதுல்ல... அப்புறம் எதுக்கு குழந்தை தொழிலாளர் முறை? படிக்க வைங்கய்யா!
 தென்னைய பெத்தா இளநீரு! பிள்ளைய பெத்தா கண்ணீரு!!
- பெறவேண்டியதுதானே..! தென்னை வந்து பொறந்து வளர்ந்து இளநீரு குடுக்கும்! ஆகுற பேச்சை பேசுங்க! கண்ணீரு... நம்ம பரம்பரை சொத்து! வருத்தப்படாத பெருசு... நாங்கதான் பொறப்போம்!
 சேரிடம் அறிந்து சேர்!
சொல்லீட்டீங்க! சரியான காலேஜா பார்த்துதான் சேர்றோம்! ம்... வேலைதான் சேர முடியலே தலைவா!

பழமொழி' கலாய்ப்புகள்!

 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!
- இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது?
 வேலிக்கு ஓணான் சாட்சி!
- இதெல்லாம் ரொம்ம ஓவர். எந்த ஓணான் கோர்ட் படியேறி சாட்சி சொல்லியிருக்கு?
 தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை!
- ஏன் தகப்பனை போல பிள்ளையே கிடையாதா? நூல் மாதிரி சேலை இருந்தா யாரு கட்டுவாங்க ரோம்ப அடுக்குறாங்கப்பா!
 ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
- பானைக்கு சரி! குக்கர், ரைஸ் குக்கர் இதுக்கெல்லாம் எப்படி? பதத்தை அதுவே பாத்துக்கும்! பானையை கொஞ்சம் கவுத்து வைங்க!
 சின்ன புள்ள வெள்ளாமை வந்து சேராது!
- தெரியுதுல்ல... அப்புறம் எதுக்கு குழந்தை தொழிலாளர் முறை? படிக்க வைங்கய்யா!
 தென்னைய பெத்தா இளநீரு! பிள்ளைய பெத்தா கண்ணீரு!!
- பெறவேண்டியதுதானே..! தென்னை வந்து பொறந்து வளர்ந்து இளநீரு குடுக்கும்! ஆகுற பேச்சை பேசுங்க! கண்ணீரு... நம்ம பரம்பரை சொத்து! வருத்தப்படாத பெருசு... நாங்கதான் பொறப்போம்!
 சேரிடம் அறிந்து சேர்!
சொல்லீட்டீங்க! சரியான காலேஜா பார்த்துதான் சேர்றோம்! ம்... வேலைதான் சேர முடியலே தலைவா!

தொந்தியின் பயன்கள்

மிழ் வினாத்தாள்களில் கட்டுரை வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.
எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டுவிட்டார். இதனால், தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன்.
கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:
கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து கூட்டமாக வாழும்.
தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:
பால் மூன்று வகைப்படும். அவையாவன:
1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.
ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.
இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.
'காந்தி பற்றி கட்டுரை வரைக'
இப்படி ஒரு கேள்வி நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது. பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.
(இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.)
தொந்தி
'காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா'
இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல. இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.
காயம் என்றால் உடல் என்று பொருள்.
பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி குறிப்பிடுகிறார்:
காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.
அதாவது,
காயத்தில் (உடலில்)
காயம் (புண்) ஏற்படின்
காயத்தில் (புண்ணில்)
காயத்தை (பெருங்காயத்தை) வைத்து கட்டு
- என்பது பொருள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று. சிலர் கண்கள் என்பர்.
உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஒரு பழமொழி உண்டு.

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.
சிரசு என்றால் தலை என்று பொருள்.
இது மிகவும் தவறான பழமொழியாகும்.
உண்மை என்னவெனில்,
எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.
இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.
1. ஓர் அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்
2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.
3. கண்ணை மூடிக்கொள்ளவும்.
4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.
5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.
6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.
7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?
நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.
நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல; வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன. காரணம், அவரது அழகான தொந்தி.
பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.
பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.
போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறைசாற்றும்.
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
பாடலாசிரியர் வைரமுத்து கூட,
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.
அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.
தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!

தொந்தியின் பயன்கள்

மிழ் வினாத்தாள்களில் கட்டுரை வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.
எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டுவிட்டார். இதனால், தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன்.
கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:
கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து கூட்டமாக வாழும்.
தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:
பால் மூன்று வகைப்படும். அவையாவன:
1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.
ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.
இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.
'காந்தி பற்றி கட்டுரை வரைக'
இப்படி ஒரு கேள்வி நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது. பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.
(இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.)
தொந்தி
'காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா'
இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல. இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.
காயம் என்றால் உடல் என்று பொருள்.
பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி குறிப்பிடுகிறார்:
காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.
அதாவது,
காயத்தில் (உடலில்)
காயம் (புண்) ஏற்படின்
காயத்தில் (புண்ணில்)
காயத்தை (பெருங்காயத்தை) வைத்து கட்டு
- என்பது பொருள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று. சிலர் கண்கள் என்பர்.
உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஒரு பழமொழி உண்டு.

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.
சிரசு என்றால் தலை என்று பொருள்.
இது மிகவும் தவறான பழமொழியாகும்.
உண்மை என்னவெனில்,
எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.
இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.
1. ஓர் அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்
2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.
3. கண்ணை மூடிக்கொள்ளவும்.
4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.
5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.
6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.
7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?
நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.
நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல; வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன. காரணம், அவரது அழகான தொந்தி.
பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.
பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.
போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறைசாற்றும்.
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
பாடலாசிரியர் வைரமுத்து கூட,
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.
அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.
தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!

தொந்தியின் பயன்கள்

மிழ் வினாத்தாள்களில் கட்டுரை வரைக என பல தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இதற்கு நிறைய மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இவை மாணவர்களின் தலையெழுத்தை மாற்றி விடும் அபாயம் உண்டு.
எனது நண்பன் அசோகன் மாமல்லபுரத்துச் சிற்பங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு கட்டுரை எழுதினான்:
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.
அவை கருங்கல்லினால் ஆனவை.
உளி வைத்துச்செதுக்கப்பட்டவை.
கொத்தனாரால் கட்டப்பட்டவை என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
இவனது விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கோபத்தில் மைனஸ் நூறு மதிப்பெண்கள் போட்டுவிட்டார். இதனால், தேர்வில் தோல்வி அடைந்த அசோகன் மாமல்லபுரத்தில் உள்ள தனது மாமா வைத்திருக்கும் டீ கடையில் வேலை செய்வதாக சமீபத்தில் கேள்விப்பட்டேன்.
கோவிந்தசாமி கடல் சிங்கங்கள் பற்றிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தான்:
கடல் சிங்கங்கள் கடலில் குட்டி போட்டு காட்டில் இடம்பெயர்ந்து கூட்டமாக வாழும்.
தங்கதுரை முப்பால் பற்றிய கட்டுரையில் இவ்வாறு எழுதினான்:
பால் மூன்று வகைப்படும். அவையாவன:
1. ஆட்டுப்பால்
2. மாட்டுப்பால்
3. நாய்ப்பால்.
ஆட்டுப்பால் காய்ச்ச வேண்டாம். அப்படியே சாப்பிடலாம். மாட்டுப்பால் சுட வைத்து குடிக்க வேண்டும். நாய்ப்பால் உடலுக்கு தீங்கானது. ஆடடுப்பால் குடித்தால் இறைப்பு வரும். நாய்ப்பால் குடித்தால் குறைப்பு வரும்.
இப்படியாக கட்டுரையில் கட்டுக்கதைகள் எழுதியவர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதலாம்.
'காந்தி பற்றி கட்டுரை வரைக'
இப்படி ஒரு கேள்வி நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது தமிழ் ஆண்டுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிந்தது. பதற்றத்தில் காந்தி என்பதை தொந்தி என தவறாக புரிந்து கொண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதித் தொலைத்து விட்டேன்.
(இதில் வேடிக்கை என்னவென்றால் என் பின்னால் அமர்ந்து தேர்வு எழுதிய எனது நண்பன் குண்டு சவுரி எனது இந்த கட்டுரையை அப்படியே காப்பி அடித்து மாட்டிக்கொண்டான்.)
தொந்தி
'காயமே இது பொய்யடா
இது வெறும் காற்றடைத்த பையடா'
இது யாரோ ஒரு சினிமா பாடலாசிரியர் எழுதிய பாடல் அல்ல. இந்த அற்புத வரிகள் ஒரு சித்தரின் சிந்தனையில் உருவானவை.
காயம் என்றால் உடல் என்று பொருள்.
பழங்கால சித்த வைத்தியர் மந்திவாயனார் தனது ஒலைச்சுவடியில் இப்படி குறிப்பிடுகிறார்:
காயத்தில் காயம் ஏற்படின்
காயத்தில் காயத்தை வைத்து கட்டு.
அதாவது,
காயத்தில் (உடலில்)
காயம் (புண்) ஏற்படின்
காயத்தில் (புண்ணில்)
காயத்தை (பெருங்காயத்தை) வைத்து கட்டு
- என்பது பொருள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நம் உடலில் உள்ள பாகங்களில் மிகவும் அழகானது எது என்று கேட்டால் அனைவரும் உடனே சொல்வது நமது முகம் என்று. சிலர் கண்கள் என்பர்.
உண்மையிலேயே நமது மேனி அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பது எது தெரியுமா? நிச்சயமாக நமது தொந்திதான். ஏன் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஒரு பழமொழி உண்டு.

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று.
சிரசு என்றால் தலை என்று பொருள்.
இது மிகவும் தவறான பழமொழியாகும்.
உண்மை என்னவெனில்,
எண்சான் உடம்பிற்கு தொந்தியே பிரதானமாகும்.
இதனை ஒரு சிறிய ஆய்வின் மூலம் நீங்கள் அறியலாம்.
1. ஓர் அறையில் சுவரின் முன்னால் நிற்கவும்
2. முதலில் நீங்கள் நேராக நிற்கவும்.
3. கண்ணை மூடிக்கொள்ளவும்.
4. அப்படியே மெதுவாக நடந்து செல்லவும்.
5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் மோதி நிற்பீர்கள்.
6. அப்படியே மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.
7. உங்கள் உடலின் எந்த பாகம் சுவரில் மோதி நிற்கிறது?
நிச்சமாக தொந்தியாகத்தான் இருக்கும்.
நமது கடவுள்களில் மிகவும் அழகானவர் தொந்தியுடைய பிள்ளையார்தான். நமது நாடு மட்டுமல்ல; வெளிநாட்டினரின் மனதை கொள்ளை கொண்டதும் பிள்ளையாரின் உருவம்தான். அதனாலேயே பல பிள்ளையார் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்படுகின்றன. காரணம், அவரது அழகான தொந்தி.
பந்திக்கு முந்திக்கொள்
தொந்தியை வளர்த்துக்கொள்.
பந்தியில்
குந்தி தின்றால்
தொந்தி வளரும்.
போன்ற பழமொழிகள் நமது முன்னோர்கள் தொந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பறைசாற்றும்.
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது.
2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.
3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.
பாடலாசிரியர் வைரமுத்து கூட,
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நீ பந்தி
நான் தொந்தி
என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.
அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.
தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.
தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே
தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.
என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.
தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும்.
தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.
இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.
ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,
போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!
ஜெய் தொந்தி!

கணவன் - மனைவி சண்டை :

கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.
எனது திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.
கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே...
நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்-னு நம்பி...(வடிவேலு ஸ்டைலில் படிக்க) வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..
அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.
1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.
2. அடுத்து யார் பக்கம் என்ன தப்பு-ன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.
3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.
ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீயே திட்டிட்டு நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.
4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "Sorry" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).
*
சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு.. என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.
*
என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.
ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்டோம்!!
*
இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது!
இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!
நம்ம ஃபிரண்டை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் ஒயிஃபை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு (ஓரளவுக்கு) வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..
என்ன தான் சுப்ரீம் கோர்ட்லயே நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!!

கணவன் - மனைவி சண்டை :

கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.
எனது திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.
கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே...
நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்-னு நம்பி...(வடிவேலு ஸ்டைலில் படிக்க) வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..
அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.
1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.
2. அடுத்து யார் பக்கம் என்ன தப்பு-ன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.
3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.
ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீயே திட்டிட்டு நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.
4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "Sorry" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).
*
சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு.. என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.
*
என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.
ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்டோம்!!
*
இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது!
இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!
நம்ம ஃபிரண்டை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் ஒயிஃபை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு (ஓரளவுக்கு) வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..
என்ன தான் சுப்ரீம் கோர்ட்லயே நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!!

கணவன் - மனைவி சண்டை :

கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்டைகள் பார்த்து பழக்கமாகி போய் தான் இருந்தது.
எனது திருமணத்துக்கு பின் முதல் ஆறு மாதம் நல்லா தான் போனது. ஃபைட் சீன்களுக்கான அறிகுறி ஒண்ணும் காணும்.
கல்யாணமான புதுசு... அப்போல்லாம் அய்யாதான் அதிகமா பேசுவார்... எனது வீர தீர பராக்கிரமங்கள்.. யார் யாரை (one side-ஆ) லவ் பண்ணேன்; எந்த எந்த கவிதை எந்த பெண்ணை பற்றி எழுதியது போன்ற விபரங்கள் சொன்னபோதெல்லாம் நம்ம 'ஹவுஸ் பாஸ்' சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க. ஒண்ணும் சொல்லலே...
நான் கூட லைஃப் இப்படியே பிரச்னை இல்லாம போகும்-னு நம்பி...(வடிவேலு ஸ்டைலில் படிக்க) வாழ ஆரம்பிக்கும் போது ஆரம்பிச்சிடுச்சு கதை..
அதன் பின் நடந்த எல்லா சண்டைகளிலும் ஒரு பொதுவான pattern இருக்கும்.
1. ஒரு பெரிய தவுஸண்ட் வாலா பட்டாசு ஒரு சின்ன திரியில் ஆரம்பிக்குமே.. அப்படி ஒரு சின்ன கிண்டல் அல்லது பேச்சில் ஆரம்பிக்கும் சண்டை. அநேகமா இந்த கிண்டல் நம்மோடதாதான் இருக்கும்.
2. அடுத்து யார் பக்கம் என்ன தப்பு-ன்னு ஒரு நீண்ட விவாதம் கோர்ட் சீன் போல் நடக்கும். இதில் அந்த நாள் பண்ணிய தப்பு பற்றி மட்டுமே பேசனும்னு எந்த ரூல்ஸும் கிடையாது. நான் வர மறந்த முக்கிய ஃபங்ஷன்கள் மற்றும் கல்யாணங்கள் என்னென்ன, ஹவுஸ் பாஸ் பக்கத்தில் இருக்கும் போதே மற்ற பெண்களை பற்றி ஹவுஸ் பாஸிடமே அடித்த கமென்டுகள் மற்றும் இன்ன பிற குற்றங்கள் புள்ளி விபரங்களுடன் வெளி வரும். இதற்கு என்னால் ஆன எதோ ஒரு விவாதம் (ரொம்ப weak-ஆக) முன் வைப்பேன்.
3. இதன் பின் ஒரு "அழுகை படலம்" நடக்கும். இப்போது நான் விட்டத்தை பார்த்து கொண்டோ, சாவி போன்ற முக்கியமான ஒன்று தேடுவது போலோ ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் டிவி ரிமோட் பக்கம் இந்த நேரம் போக கூடாது. அது எரியும் தீயில் எண்ணை ஊற்றும் செயல்.
ஆரம்பத்தில் ரொம்ப அப்பாவியாய், "நானா உன்னை திட்டினேன்? நீயே திட்டிட்டு நீயே ஏன் அழுகிறே?" என்று கேட்டுள்ளேன். இப்போது அப்படி கேட்குமளவு தைரியம் இல்லை.
4. இதன் பின் சமாதான உடன்படிக்கை நிகழும். நீங்கள் நம்பா விட்டாலும் கூட சொல்லி வைக்கிறேன்.. பெரும்பாலான நேரம் நம்ம ஹவுஸ் பாஸ் தான் நம்ம கிட்டே "Sorry" கேட்டு சண்டையை முடிச்சு வைப்பார். (ஆம்பளை ஈகோவை பார் என பெண்கள் முணு முணுப்பது கேட்கிறது).
*
சில நேரம் ரொம்ப விரக்தி ஆகி வீட்டை விட்டு வெளிநடப்பு செய்ய பார்ப்பேன். அது மட்டும் நம்ம ஹவுஸ் பாஸுக்கு பிடிக்கவே பிடிக்காது. எங்கிருந்து தான் வருமோ அவ்வளவு தெம்பு.. என்னை பிடிச்சு உள்ளே தள்ளி வீட்டை பூட்டி விடுவார்.
*
என்ன தான் எத்தனையோ சண்டைகள் போட்டாலும், ஒரு முறை எங்க அக்கா வந்திருந்த போது நாங்கள் இருவரும் போட்ட சண்டை தான் இன்றளவும் எல்லாராலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேசபடுகிறது.
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்த சண்டை விடிய விடிய நடந்தது. நைட் ஷோ படம் மட்டுமல்ல, அதற்கு பிறகு ஒரு ஷோ கூட முடிஞ்சிருக்கும் என்பார்கள் என் ஃபேமிலியில்.. நடுவில் புகுந்து தடுக்க பார்த்த அக்காவுக்கும் எங்களால் ஆன அன்பளிப்பு கொடுக்க, அக்கா அப்புறம் கப் சிப்.
ஒரே நல்ல விஷயம் காலையில் "போர் நிறுத்தம்" அறிவித்து இருவரும் வேலைக்கு போய்டோம்!!
*
இப்போல்லாம் சண்டைகள் ஓரளவு குறைந்து விட்டது!
இதற்கு முக்கிய காரணம் எனக்கு வந்த புரிதல்தான்!
நம்ம ஃபிரண்டை உரிமையாய் கிண்டல் பண்ணுவது போல் ஒயிஃபை கிண்டல் பண்ண கூடாது என்ற தெளிவு (ஓரளவுக்கு) வந்தடுச்சு.. மேலும் எந்த சண்டை வந்தாலும் உடனே தோல்வியை ஒப்பு கொண்டு சரண்டர் ஆகி விட்டால் சண்டை சீக்கிரம் முடிந்து விடும்..
என்ன தான் சுப்ரீம் கோர்ட்லயே நெம்பர் ஒன் வக்கிலாக இருந்தாலும் பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது!!

நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்

(ஸ்ருதி தாளம் லயம் எந்தத் தேவையுமின்றி பாடகர் உச்சஸ்தானியில் அலறிப்பாடும் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவராத தத்துவப் பாடலைப்பற்றி சில வரிகளை உங்களுக்காக தருகிறேன்...)
ங்களில் பலரைப் போலவே எனக்கும் ஆரம்பத்தில் இந்த நாக்க முக்கா நாக்க முக்கா என்ற 'காதலில் விழுந்தேன்' படப்பாடல் பிடிக்கவே இல்லை. அப்பப்ப தமிழ் சினிமாவில் இந்த மாதிரி வேகமான குத்துப் பாடல்கள் வந்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கிவிட்டு சிறிது காலத்தில் காணாமல் போய்விடும் என்று எனது பாட்டில் இருந்துவிட்டேன். உதாரணத்துக்கு 'ஓ போடு' 'மன்மதராசா' என நிறைய சொல்லலாம்..
தற்செயலாகத்தான் இந்த நாக்க முக்காவை கேட்க நேர்ந்தது (நிரப்பந்தத்தின் பேரில்தான்..) கேட்ட பிறகுதான் ஓர் அருமையான தத்துவப்பாடலை நான் இதுவரை வெறுத்து ஒதுக்கிவிட்டேன் என்று என்னையே கடிந்து கொண்டேன். வலுக்கட்டாயமாக இதைக் கேட்க வைத்த எனது நண்பனுக்கு நிறைய நன்றி சொன்னேன்.
இப்படி ஒரு தத்துவப் பாடலை கண்ணதாசன் கேட்டிருந்தால் அகமகிழ்ந்து போயிருப்பார், தனக்குப் பிறகும் அற்புதமான தத்துவப்பாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று.
அதிகப் பிரசங்கத்தினம் போதும்.. இனி பாடலில் பொதிந்திருக்கும் தத்துவங்களைப் பார்க்கலாம்...
படம் : காதலில் விழுந்தேன் (படத் தலைப்பே கவிதை)
பாடல் : ஆர்ரார்ரா நாக்க முக்கா (தமிழ்ப்பாடல்தான்)
இசை+பாடியவர் : விஜய் ஆன்டனி
பாடல் தொடங்கும்போது நீங்களெல்லாம் அதி உன்னிப்பாக கேட்கவேண்டும் ஆங்கிலத்தில் பாடலைப் பற்றிய சிறு குறிப்பொன்று சொல்லப்படும். அதன் தமிழாக்கம் இதுதான். "நண்பர்களே இது ஒரு பாடல் (அதையும் அவர்கள் சொல்லித்தான் நம்ப வேண்டியிருக்கிறது) இது ஒரு உண்மைக் கணிதவியல் (அப்படித்தான் எனக்குக் கேட்டது) மற்றும் விளையாட்டு (எனது
மொழிபெயர்ப்பை நீங்கள் ஒருமுறை சரிபாருங்கள்) ஆங்கில வாசகங்கள் முடிந்தவுடன்
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
என்று புரியாதவர்களுக்காக அந்தத் தத்துவம் இரண்டு முறை சொல்லப்படும்...
அதாவது மாடு செத்தால் மனுசன் அதை சாப்பிட்டு விட்டு அதன் தோல் பகுதியை மேளமாக இசைக்காக உபயோகிக்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மனுசன் செத்தால் என்ன செய்கிறோம்... அந்த மேளத்தை கொட்டி ஆடோ ஆடென்று ஆடி அவனுக்கு இறுதிக்கிரியைககள் செய்கிறோம். இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றது. மனுசன் மாட்டிலிருந்து தனது அறிவுக்கு எட்டியவரை அதனை உணவாகவும் இசைக்கருவி ஒன்றுக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தி தனக்கு ஆறறிவு என்பதை நிரூபிக்கிறான்!
இரண்டாவது விஷயம் மாடு மனிதனை விட சிறந்தது.காரணம் மனுசன் செத்த பிறகும் செத்த ஒரு மாட்டின் தோல்தானே அவனது இறுதி ஊர்வலத்தில் பயன்படுகிறது..? (புரியாதவர்கள் மீண்டும் ஒரு முறை இதை படியுங்கள்)
அதனைத்தொடர்ந்து...
அதி உச்சஸ்தானியில் பாடலின் முக்கிய கருப்பொருளான
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
என்று இசையோடு கலந்து நமது சிந்தைகளை மெல்ல மெல்ல கிளறுகிறது. அதற்குப் பிறகு ஒரே வகையான இசையோடு (16 ராகங்களிலிருந்து வேறுபட்ட புதியதொரு ராகம்... 7 ஸ்வரங்களில் இது எந்த ஸ்வரம் என்று பிடிபடவில்லை)
முதல் சரணம் தொடங்குவற்கு முதல் அந்தத் தத்துவம் மீண்டும் ஒலிக்கிறது (திரும்த் திரும்ப வாழ்வின் யதார்த்தத்தை நமக்கெல்லாம் புரியவைக்கத்தான்)
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
"ஆர்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க....................."
சரணம் தொடங்க முதல் "அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனாரே என்று இந்தியிலும் ஏதோ தத்துவம் சொல்கிறார்கள். எனக்கு இந்தி மொழி தெரியாததால் அதைப்பற்றி அலசிப்பயனில்லை.
தொடரும் முதலாவது சரணத்தை பாருங்கள்...
பந்தாட்டம் உழல வெச்சான்
ராட்டினம் போல் சுழல வெச்சான்
ஏற வெச்சான் எறங்க வெச்சான்
சுழலவிட்டு மயங்க வெச்சான்
மயங்கினவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா 
(பாடகரின் கத்தலிலேயே உண்மையா மயங்கினவன் எழும்பி விடுவான் போலுள்ளது)
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா (அடிக்கச் சொல்வது மேளத்தையா... மயகக்த்தில எழுப்பியவனையா..? என்று பாடலைக் கேட்பவர்களை சிந்திக்க வைக்கிறார்கள்)
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...

என்று மீண்டும் மீண்டும் உலக தத்துவத்தை நினைவுபடுத்துகிறார்கள்
உலக வாழ்க்கை வட்டம் மாதிரி. உயரத்தில் இருப்பவன் கீழே வந்துதான் ஆகணும். கீழ இருப்பவன் உயர்ந்துதான் ஆகவேண்டும். எனவே வீணான மமதை மயக்கத்திலிருந்து நாமெல்லாம் விடுபடவேண்டும் எனறு வித்தியாசமான உவமையில்
பாடலில் சொல்லப்படுகிறது. (பந்தாட்டம் ராட்டினம் போன்ற உவமைகளைச் சொன்னேன்)
அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த "அடி லாரீப் சோனா" என்ற இந்தி மொழித்தத்துவம் உச்சஸ்தானியில் பலமுறை ஒலிக்கிறது.
இனி இரண்டாவது சரணம்
பொண்ணுங்கள பொறக்க வெச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வெச்சான் கருவ வெச்சான்
கற்பவெச்சான்

(இது தெரியாதா எங்களுக்கு என்று விதண்டாவாதமாக கேட்க வேண்டாம் நண்பர்களே...)
கற்புக்குள்ள தீய வெச்சான்
தீய வெச்சு எரிய வெச்சான்
எரிய வெச்சான்
மதுர எரிய அணைங்கடா அணைங்கடா அணைங்கடா...
பொண்ணுங்கள பொறக்க வெச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வெச்சான் கருவ வெச்சான்
கற்பவெச்சான்
கற்புக்குள்ள தீய வெச்சான்
தீய வெச்சு எரிய வெச்சான்
எரிய வெச்சான்
மதுர எரிய அணைங்கடா அணைங்கடா அணைங்கடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
கூத்துக்கட்டுடா...
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
அடி லாரீப் சோனா லாரீப் சோனா லாரீப் சோனா ரே....
(இந்தி மொழியை இதைப்புரிந்த கொள்ளவேனும் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று அதிகம் கவலைப்படுகிறேன்)
ரண்டாவது சரணத்தில் நிறைய உண்மைகள் தொடடுக் காட்டப்பட்டிருப்பதை அவதானியுங்கள்.. அவைகளில் சில அதோ இலக்க வடிவில்
01) பெண்ணியம் பேசப்படுகிறது
02) கண்ணகி மாதவியின் சிலப்பதிகார வரலாறு மீளப்போதிக்கப்பட்டுள்ளது.
03) கற்பு என்பதன் மகோன்னதம் விளக்கப்பட்டுள்ளது.
04) பெண்களின் கருவினால்தான் மனித உயிரகள் சூல் கொள்கின்றன என்பது அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
05) பெண்களுக்கெதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற எச்சரிக்கைத் தொனி ஒலிக்கக் காண்பீர்கள்
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா
மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா......
என்கிற வாசகங்களோடு
ஒரு பெண் குரலின்
"நாக்க முக்க.." என்ற உச்சரிப்புடன் அழகாக முடிகிறது இந்தப் பாடல்...
இப்போது சொல்லுங்கள்... அது எப்பேர்ப்பட்ட தத்துவப் பாடல் என்று..????
ரொம்ப கஷ்டப்பட்டு பாடல் வரிகளை விளங்க பல முறை பாடலைக் கேட்ட பிறகே எனக்குப் பாடல் புரிந்தது. இது கூட ஒரு உண்மையை சொல்கிறது. அதாவது கஷ்டப்பட்டால்தான் சில விஷயங்களை அடைய முடியும் என்ற தத்துவத்தை மிக
லாவகமாக பாடல் உணர்த்துகிறது.
இவ்வளவு கஷ்டப்பட்டும் என்னால் ஒரேயொரு விஷயத்தை இந்தப் பாடலில் இருந்து தெரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் தயவு செய்து சொல்லிவிடுங்கள். காரணம் தெரியும் வரை எனக்கு தூக்கம் வருவது
சந்தேகம்தான்...
அது என்னவெனில்...
"நாக்க முக்க" என்றால் என்ன என்பதுதான்...

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons