1 டிச., 2011

திருட்டை ஒழிக்க சிறந்த வழி!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி 

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது!
வங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது!
‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
இத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான்! அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.
‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’
இத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.
எனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன. ஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா? அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா? நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை! திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.
இஸ்லாம் இத்தகைய திருட்டுக் குற்றங்களை குறைப்பதற்காக கடுமையான தண்டனையை விதிக்கிறது. பிறர் பொருளை திருடுபவன் அவர் தம் வாழ்நாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருள்களாயிற்றே என்ற ஈவிரக்கமின்றி திருடி அவருடைய வாழ்வையே சிதைப்பதைப் போலவே அந்த திருடன் மீதும் ஈவிரக்கம் காட்டாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை விதித்து அவன் மீண்டும் அத்தகைய தொழிலில் ஈடுபட அவனைத் தடுக்கிறது. மேலும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட தடைசெய்கிறது.
மனிதர்களைப் படைத்ததோடு அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து தாமும் நெறிகெட்டு மற்றவர்களையும் சீரழிந்து போகவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் சீரிய, நேரிய வாழ்வை வாழ்வதற்காக ஏக இறைவனாகிய அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகின்றான்:
‘திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்” (ஆதாரம் : புகாரி)
மேலும் திருடியவன் அந்தஸ்துள்ளவனா அல்லது பணபலம் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவனா என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. திருடியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:
‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
‘மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்’ (ஆதாரம் : புகாரி)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
“கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி
மற்றுமொரு ஹதீஸில்,
“கால் தீனார் மதிப்புள்ள பொருளை திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்கு குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

திருட்டை ஒழிக்க சிறந்த வழி!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி 

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது!
வங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது!
‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
இத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான்! அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.
‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’
இத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.
எனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன. ஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா? அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா? நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை! திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.
இஸ்லாம் இத்தகைய திருட்டுக் குற்றங்களை குறைப்பதற்காக கடுமையான தண்டனையை விதிக்கிறது. பிறர் பொருளை திருடுபவன் அவர் தம் வாழ்நாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருள்களாயிற்றே என்ற ஈவிரக்கமின்றி திருடி அவருடைய வாழ்வையே சிதைப்பதைப் போலவே அந்த திருடன் மீதும் ஈவிரக்கம் காட்டாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை விதித்து அவன் மீண்டும் அத்தகைய தொழிலில் ஈடுபட அவனைத் தடுக்கிறது. மேலும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட தடைசெய்கிறது.
மனிதர்களைப் படைத்ததோடு அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து தாமும் நெறிகெட்டு மற்றவர்களையும் சீரழிந்து போகவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் சீரிய, நேரிய வாழ்வை வாழ்வதற்காக ஏக இறைவனாகிய அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகின்றான்:
‘திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்” (ஆதாரம் : புகாரி)
மேலும் திருடியவன் அந்தஸ்துள்ளவனா அல்லது பணபலம் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவனா என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. திருடியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:
‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
‘மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்’ (ஆதாரம் : புகாரி)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
“கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி
மற்றுமொரு ஹதீஸில்,
“கால் தீனார் மதிப்புள்ள பொருளை திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்கு குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

திருமண உறவு முறை!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி…
மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை ஒரு கொடையே!
பன்டுதொட்டு திருமண பந்த உறுவுமுறைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. பன்பட்ட உள்ளங்களால் உருவாக்கப்பட்ட இந்த திருமண உறவு முறையை அநாகரீகமான ஒரு நடைமுறையாக சித்தரித்து வரம்புகளற்ற, காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தை மேற்கத்தேய சில தீய சக்திகள் விதைத்து வருகின்றமை ஒரு கவளைக்குறிய விடயமாகும். தாம் சீரழிந்தது போதாமைக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம் கிராமங்களிலும் தம் அசிங்கங்களை, பயிற்சிப் பட்டறைகள், சமூக அபிவிருத்தி முகாம்கள், மகளிர் மேம்பாட்டு வைபவங்கள், இளைஞர் நல முகாமைத்துவம் போன்ற பெயர்களில் நச்சக்கலாச்சாரங்களுக்கு வித்திட்டு வரும் செய்திகள் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.
எனவே, சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டிய தருணம் கைகூடியுள்ளன. குறிப்பாக மேற்கத்தேய அமைப்புக்களால் நடாத்தப்படும் கூட்டங்களில் ஜாக்கிரதையக இருப்பதுடன் மட்டுமல்லாது முடிந்தால் அவர்ளால் கூட்டங்கள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் நடாத்தவென அனுமதி கோரும் பட்சத்தில் குறைந்த பட்சம், நிபந்தனைகளுடன் அனுமதிப்பதுதான் நம் பாதுகாப்புக்கு நல்லது.
இத்தருனத்தில் இஸ்லாமியத் திருமணம் தொடர்பாக இடம்பெற்றுள்ள சில குர்ஆன் வசனங்களையும் சில பொன் மொழிகளையும் இங்கு தருகின்றோம்:
சம்பந்தி உறவுகளை ஏற்படுத்தியவன்:
‘அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்’. (திருக்குர்ஆன் 25:54 )
இஸ்லாம் கூறும் பெண் உரிமை:
‘பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன’. (அல்குர்ஆன் 2:228)
மஹர் (திருமணக் கொடை) பெண்ணின் உரிமை:
‘மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும், விட்டுக் கொடுப்பதும், கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும்’. (அல்குர்ஆன் 2:229, 2:237, 4:4)
மஹர் கொடுத்தல் ஓர் கட்டாயக் கடமை:
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்’. (அல்குர்ஆன் 4:4)
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குவது கட்டாயக் கடமையாகும்:
ஆதாரம்: (அல்குர்ஆன் 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10. )
மஹர் தொகைக்கு அளவு கிடையாது:
ஒரு பொற்குவியலையே மஹராகக் கொடுக்கலாம். (ஆதாரம் அல்குர்ஆன் 4:20 )
பண்டைக்காலத்தில் மஹர் (மஹராக எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்த நபி மூஸா (அலை).
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சார்ந்தது. நான் உமக்கு சிரமம் தர விரும்பவில்லை. (என்று மூஸாவின் மாமனார் கூறினார்) இதுவே எனக்கும் உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக்கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 28:27,28)
திருமணம் பற்றி திருமறையில் இறைவனின் கட்டளை:
‘உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்.’ ( திரு குர்ஆன் 04:03)
பலதார மணம்:
‘மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவர் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) நூல் புகாரி 5069.
ஒருவரிலிருந்து ஒருவர்:
‘உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான்’. (அல்குர்ஆன் 39:6, 4:1, 7:189. )
மன அமைதி:
‘அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.’ அல்குர்ஆன் 7:189.
சிந்தனையைத் தூண்டும் இஸ்லாமிய மணம்:
‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21.)
நல்ல முறையில் குடும்பம்:
‘அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்.’ (அல்குர்ஆன் 4:19.)
ஆடை:
‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’. (அல்குர்ஆன் 2:187.)
விளைநிலங்கள்:
“உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்.” (அல்குர்ஆன் 2:223)
துறவறம் கூடாது:
‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) அல்குர்ஆன் 57:27.
இல்லறம் நபிமார்களின் வழிமுறை:
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. அல்குர்ஆன் 13:38.
திருமணத்தால் வறுமை அகலும். ‘உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். அல்குர்ஆன் 24:32.
திருமண வீட்டில் தஃப் அடித்தல், பாட்டுப் பாடல்:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் – ரஹ் – அவர்களிடம்) ‘எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள். அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) நூல் புகாரி 4001. 5147.
இல்லறத் தம்பதிகள் கேட்கும் துஆ:
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்கு கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக என்று (நல்லறம் செய்யும்) அவர்கள் கூறுகின்றனர்” (அல்குர்ஆன் 25:74)

திருமண உறவு முறை!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி…
மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை ஒரு கொடையே!
பன்டுதொட்டு திருமண பந்த உறுவுமுறைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. பன்பட்ட உள்ளங்களால் உருவாக்கப்பட்ட இந்த திருமண உறவு முறையை அநாகரீகமான ஒரு நடைமுறையாக சித்தரித்து வரம்புகளற்ற, காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தை மேற்கத்தேய சில தீய சக்திகள் விதைத்து வருகின்றமை ஒரு கவளைக்குறிய விடயமாகும். தாம் சீரழிந்தது போதாமைக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம் கிராமங்களிலும் தம் அசிங்கங்களை, பயிற்சிப் பட்டறைகள், சமூக அபிவிருத்தி முகாம்கள், மகளிர் மேம்பாட்டு வைபவங்கள், இளைஞர் நல முகாமைத்துவம் போன்ற பெயர்களில் நச்சக்கலாச்சாரங்களுக்கு வித்திட்டு வரும் செய்திகள் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.
எனவே, சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டிய தருணம் கைகூடியுள்ளன. குறிப்பாக மேற்கத்தேய அமைப்புக்களால் நடாத்தப்படும் கூட்டங்களில் ஜாக்கிரதையக இருப்பதுடன் மட்டுமல்லாது முடிந்தால் அவர்ளால் கூட்டங்கள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் நடாத்தவென அனுமதி கோரும் பட்சத்தில் குறைந்த பட்சம், நிபந்தனைகளுடன் அனுமதிப்பதுதான் நம் பாதுகாப்புக்கு நல்லது.
இத்தருனத்தில் இஸ்லாமியத் திருமணம் தொடர்பாக இடம்பெற்றுள்ள சில குர்ஆன் வசனங்களையும் சில பொன் மொழிகளையும் இங்கு தருகின்றோம்:
சம்பந்தி உறவுகளை ஏற்படுத்தியவன்:
‘அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்’. (திருக்குர்ஆன் 25:54 )
இஸ்லாம் கூறும் பெண் உரிமை:
‘பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன’. (அல்குர்ஆன் 2:228)
மஹர் (திருமணக் கொடை) பெண்ணின் உரிமை:
‘மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும், விட்டுக் கொடுப்பதும், கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும்’. (அல்குர்ஆன் 2:229, 2:237, 4:4)
மஹர் கொடுத்தல் ஓர் கட்டாயக் கடமை:
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்’. (அல்குர்ஆன் 4:4)
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குவது கட்டாயக் கடமையாகும்:
ஆதாரம்: (அல்குர்ஆன் 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10. )
மஹர் தொகைக்கு அளவு கிடையாது:
ஒரு பொற்குவியலையே மஹராகக் கொடுக்கலாம். (ஆதாரம் அல்குர்ஆன் 4:20 )
பண்டைக்காலத்தில் மஹர் (மஹராக எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்த நபி மூஸா (அலை).
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சார்ந்தது. நான் உமக்கு சிரமம் தர விரும்பவில்லை. (என்று மூஸாவின் மாமனார் கூறினார்) இதுவே எனக்கும் உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக்கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 28:27,28)
திருமணம் பற்றி திருமறையில் இறைவனின் கட்டளை:
‘உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்.’ ( திரு குர்ஆன் 04:03)
பலதார மணம்:
‘மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவர் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) நூல் புகாரி 5069.
ஒருவரிலிருந்து ஒருவர்:
‘உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான்’. (அல்குர்ஆன் 39:6, 4:1, 7:189. )
மன அமைதி:
‘அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.’ அல்குர்ஆன் 7:189.
சிந்தனையைத் தூண்டும் இஸ்லாமிய மணம்:
‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21.)
நல்ல முறையில் குடும்பம்:
‘அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்.’ (அல்குர்ஆன் 4:19.)
ஆடை:
‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’. (அல்குர்ஆன் 2:187.)
விளைநிலங்கள்:
“உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்.” (அல்குர்ஆன் 2:223)
துறவறம் கூடாது:
‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) அல்குர்ஆன் 57:27.
இல்லறம் நபிமார்களின் வழிமுறை:
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. அல்குர்ஆன் 13:38.
திருமணத்தால் வறுமை அகலும். ‘உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். அல்குர்ஆன் 24:32.
திருமண வீட்டில் தஃப் அடித்தல், பாட்டுப் பாடல்:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் – ரஹ் – அவர்களிடம்) ‘எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள். அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) நூல் புகாரி 4001. 5147.
இல்லறத் தம்பதிகள் கேட்கும் துஆ:
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்கு கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக என்று (நல்லறம் செய்யும்) அவர்கள் கூறுகின்றனர்” (அல்குர்ஆன் 25:74)

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 2


எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் அபூ ரிஸ்வான்

இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும், அதற்கான பொருளாதார வசதியில்லாதவர்கள் கூட கடன் வாங்கியோ அல்லது தவனை முறையிலோ பொருள்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
மேலும் பணிகளுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் ரொக்கமாக கொடுத்து பொருள்களை வாங்க முடியாவிட்டால் தங்களது கிரெடிட் கார்டு (credit card) மூலம் பொருள்களை வாங்க முற்படுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருள்களுக்கு உண்டான தொகையை அடுத்த மாதத்திற்குள் கிரெடிட் கார்டு பெற்றுக் கொண்ட வங்கியில் செலுத்தத் தவறினால் அதற்கு மிக அதிக சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்களை கணக்குவழக்கில்லாமல் வாங்கிக் குவித்து முழுமையாக திவாலானவர்கள் (Bankrupcy) பல லட்சம் பேர்கள்! இருப்பினும் உடனே ரொக்கத்தை கொடுக்காமல் நினைத்த பொருள்களை வாங்க முடிகிறதே என்ற எண்ணத்தில் பொருள்களை தேவைப்படாவிட்டாலும் வாங்கிவைத்துக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மிகப்பெரும் செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி அனுபவிக்க எத்தகைய செலவையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள். உலகப்புகழ் (?) ஷாப்பஹாலிக்குகளில் சிலருடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் – மேரி ஆன்டாய்னெட் (Marie Antoinette), மேரி டோட் லிங்கன் (Mary Todd Lincon), வில்லியம் ரண்டால்ப் ஹீஸ்ட் (William Randolph Hearst), ஜாக்குலின் கென்னடி ஒனாயிஸ் (Jacqualine Kennedy Onasis), இமால்டா மார்கோஸ் (Imelda Marcos) மற்றும் இளவரசி டயானா (Princess Diana) என்பவர்களாகும்.
இவர்களின் விபரீத ஆசைகள் (addiction), விதவிதமான உடைகள் (ஜாக்குலின், டயானா), கலைப்பொருள்களும், பழங்காலப் பொருட்களும் (art & antiques) – (ஹீஸ்ட்), காலனிகளும் (shoes) – இமால்டா – பிலிப்பைன்ஸ் (Philiphines) நாட்டு சர்வாதிகாரி மார்கோஸின் மனைவி இமால்டா மார்கோஸ் வசித்த மாளிகையில் சோதனையிட்ட காவலர்கள், (மார்கோஸை புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு துரத்திவிட்டு) இமால்டாவின் காலனிகளின் மொத்த எண்ணிக்கையாக 8000 ஜோடிகள் இருந்ததாகக் கண்டார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம் பார்க்கும் போதும் இப்படிப்பட்ட வாங்கும் பைத்தியங்கள் கூட உலகில் இருந்திருக்கிறார்களா என்று நாம் வியப்புறத் தோன்றும்.
 
இன்றும் சில கொழுத்த பணக்காரர்கள் உலகில் பலநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு விஷேசமான பொருட்களை (rare items) சேகரித்து வைத்துக் கொண்டு அழகுபார்ப்பது ஒரு பொழுது போக்கு அல்லது ஓய்வு நேரப்பணி (hobby) ஆகும். இப்படி சேகரிப்பவர்களிடம் உள்ள பொருள்களின் வகைகளுக்கு அளவே இல்லை. சிலர் பழையகாலத்து மோட்டார் வாகனங்களை (antique cars) சேகரிக்கிறார்கள்! சிலர் பழைமை கால கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் மேலும் சிலர் வகைவகையான மோட்டார் சைக்கிள்களையும், இன்னும் சிலர் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்ட முட்டையையும் (நிஜ முட்டையல்ல – அலங்காரப் பொருள்) (Eggs), மேலும் சிலர் பழங்காலம் முதல் நிகழ்காலம் வரை வெளியிடப்பட்ட கரண்ஸி நோட்டுகள் மற்றும் நாணயங்களையும், சேகரித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு புத்தகங்கள் , சிலைகள், இசைக் கருவிகள், ரிக்காட்டுகள் என்று எண்ணிலடங்காத சேகரிக்கும் பொருள்கள் (collector’s items) உள்ளன. சிகெரெட் லைட்டர்ஸ் (cigarette lighters) முதல், தீப்பெட்டிவரை (match boxes) சேகரிக்கும் பொருள்களாக உள்ளது. இப்பொருட்கள் சிலசமயம் மிகப்பெரும் தொகைக்கு இன்னொரு சேகரிப்போரால் (collector) வாங்கிக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட சேகரிப்போருக்கு மனஉள்திருப்தியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதுதான் கைமேல் கண்டபலன்.
இப்படிப்பட்ட ஷாப்பஹாலிக்குகளாய் இருந்தாலும், மற்றும் ஒரே வகையானவைகளை சேகரிப்பவராக இருந்தாலும் இஸ்லாம் இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
திருக்குர்ஆனில் வல்ல இறைவன் தன் உண்மையான அடியார்களைப் பற்றி கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறான்:
“மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்”  (அல்-குர்ஆன், அல்-ஃபுர்கான் 25:67)
இத்திருவசனத்திலிருந்து இறைவன் ‘வீண்விரயம் செய்வோரையும்’ ‘கஞ்சத்தனம் செய்வோரையும்’ தன் உண்மையான இறை நம்பிக்கையாளராய் ஏற்றுக்கொள்வதில்லை என்று கண்டோம்.
இன்னொரு திருவசனத்தில் அல்லாஹ் (சுப்ஹா…) கூறுகிறான்:
“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும், இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
‘ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை’ குறிப்பிடும் பொழுது அல்லாஹ் (சுப்ஹா…), ‘கையை முற்றிலும் விரித்துவிட்டவர்’ என்று உவமானத்தோடு குறிப்பிடுகின்றான். இவர்கள் முதலில் பழிப்பிற்குரியவர்களாகவும், பின்னர் எதுவும் கொடுக்க அல்லது வாங்க இயலாதவராகவும் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக காண்பதாகும்.
பிறிதொரு இறைவசனத்தில் ‘வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ என்று குறிப்பிட்டு ஷைத்தானாகவே அடையாளம் காட்டுகின்றான். அத்திருவசனம் பின்வருமாறு உள்ளது:
“உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
வீண் விரயம் செய்யாதீர்கள், அப்படி செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர் என்று கூறுவதற்கு முன்னர், இறைவன் தன் அடியானுக்கு கொடுத்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து உறவினர்களுக்கும், வரியவர்களுக்கும், மேலும் வழிப்போக்கர்களுக்கும் உரிய பங்கினை வழங்கிவிடுமாறு அறிவுரை பகர்கின்றான். இதில் கடமையாக்கப்பட்ட ஜக்காத்தும், உபரியாக செய்யும் தான தர்மங்களும் (ஸதகாவும்) அடங்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது செல்வ நிலைக்கேற்ப கணக்குப் பார்த்து ஜகாத்தும், அதற்கு மேலாக சதகாவும் வருடாவருடம் கொடுத்து வருவாரேயானால் அவரை இறைவன் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரனாக ஆவதைவிட்டும் பாதுகாப்பான்.
ஆனால் நிலைமை இன்று எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், அதிகமாக வீண் செலவு செய்பவர்கள் ஜக்காத் கொடுக்காதவர்களாகவும், மற்ற தானதர்மங்களைச் செய்யாதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் செல்வங்களையெல்லாம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், அலங்கார பொருட்களுக்கும் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் சாதனங்களுக்கும் செலவிடப்படுவதால் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு முஸ்லிமுக்கு தனது செலவுக்குப் போக மீதம் சேமித்த தொகை அவனிடம் ஒரு வருடம் பணமாகவோ அல்லது விற்பனைக்கு இருக்கும் நிலம் போன்றவைகளாகவோ இருந்தால் தான் ஜக்காத் கடமையாகிறது. ஆனால் தன் ஆடம்பரச் செலவுகளாலும் வீண் செலவுகளாலும் பணத்தை அழிக்கும் ஒருவர் ஜக்காத் கொடுக்க எப்படி முடியும்? அப்படி கொடுத்தாலும் மிகக்குறைவாகவே கொடுப்பார்; கணக்குப் பார்த்துக் கொடுக்கமாட்டார். ஆகையால் தான் அவரை ‘ஷைத்தானின் சகோதரராய்’ இறைவன் வர்ணிக்கின்றான்.
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறியாக இருப்பதால் இறைவன் தனது அடியானுக்கு – தன்மேல் நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனுக்கு – வீண் செலவு செய்தல் மற்றும் பொருள்களை வீண் விரயம் செய்வதை முற்றாக தடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை பகர்கின்றான். ஒரு முஸ்லிம் வீண்செலவை கட்டுப்படுத்திக் கொள்ள இந்த ஒரு அறிவுரையே போதும். ஒரு முஸ்லிம் ஊதாரித்தனமாய் வீண் செலவு செய்யாமலும், கஞ்சத்தனமாய் செலவு எதுவும் செய்யாமலும் இருக்கக்கூடாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் – மிதமாக செலவு செய்வதுதான் ஒரு முஸ்லிம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், ஏன் தன் நாட்டிற்கும் நன்மைகளை பெறமுடியும்.
வீண் செலவு செய்து தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவதில்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 2


எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் அபூ ரிஸ்வான்

இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும், அதற்கான பொருளாதார வசதியில்லாதவர்கள் கூட கடன் வாங்கியோ அல்லது தவனை முறையிலோ பொருள்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
மேலும் பணிகளுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் ரொக்கமாக கொடுத்து பொருள்களை வாங்க முடியாவிட்டால் தங்களது கிரெடிட் கார்டு (credit card) மூலம் பொருள்களை வாங்க முற்படுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருள்களுக்கு உண்டான தொகையை அடுத்த மாதத்திற்குள் கிரெடிட் கார்டு பெற்றுக் கொண்ட வங்கியில் செலுத்தத் தவறினால் அதற்கு மிக அதிக சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்களை கணக்குவழக்கில்லாமல் வாங்கிக் குவித்து முழுமையாக திவாலானவர்கள் (Bankrupcy) பல லட்சம் பேர்கள்! இருப்பினும் உடனே ரொக்கத்தை கொடுக்காமல் நினைத்த பொருள்களை வாங்க முடிகிறதே என்ற எண்ணத்தில் பொருள்களை தேவைப்படாவிட்டாலும் வாங்கிவைத்துக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மிகப்பெரும் செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி அனுபவிக்க எத்தகைய செலவையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள். உலகப்புகழ் (?) ஷாப்பஹாலிக்குகளில் சிலருடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் – மேரி ஆன்டாய்னெட் (Marie Antoinette), மேரி டோட் லிங்கன் (Mary Todd Lincon), வில்லியம் ரண்டால்ப் ஹீஸ்ட் (William Randolph Hearst), ஜாக்குலின் கென்னடி ஒனாயிஸ் (Jacqualine Kennedy Onasis), இமால்டா மார்கோஸ் (Imelda Marcos) மற்றும் இளவரசி டயானா (Princess Diana) என்பவர்களாகும்.
இவர்களின் விபரீத ஆசைகள் (addiction), விதவிதமான உடைகள் (ஜாக்குலின், டயானா), கலைப்பொருள்களும், பழங்காலப் பொருட்களும் (art & antiques) – (ஹீஸ்ட்), காலனிகளும் (shoes) – இமால்டா – பிலிப்பைன்ஸ் (Philiphines) நாட்டு சர்வாதிகாரி மார்கோஸின் மனைவி இமால்டா மார்கோஸ் வசித்த மாளிகையில் சோதனையிட்ட காவலர்கள், (மார்கோஸை புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு துரத்திவிட்டு) இமால்டாவின் காலனிகளின் மொத்த எண்ணிக்கையாக 8000 ஜோடிகள் இருந்ததாகக் கண்டார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம் பார்க்கும் போதும் இப்படிப்பட்ட வாங்கும் பைத்தியங்கள் கூட உலகில் இருந்திருக்கிறார்களா என்று நாம் வியப்புறத் தோன்றும்.
 
இன்றும் சில கொழுத்த பணக்காரர்கள் உலகில் பலநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு விஷேசமான பொருட்களை (rare items) சேகரித்து வைத்துக் கொண்டு அழகுபார்ப்பது ஒரு பொழுது போக்கு அல்லது ஓய்வு நேரப்பணி (hobby) ஆகும். இப்படி சேகரிப்பவர்களிடம் உள்ள பொருள்களின் வகைகளுக்கு அளவே இல்லை. சிலர் பழையகாலத்து மோட்டார் வாகனங்களை (antique cars) சேகரிக்கிறார்கள்! சிலர் பழைமை கால கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் மேலும் சிலர் வகைவகையான மோட்டார் சைக்கிள்களையும், இன்னும் சிலர் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்ட முட்டையையும் (நிஜ முட்டையல்ல – அலங்காரப் பொருள்) (Eggs), மேலும் சிலர் பழங்காலம் முதல் நிகழ்காலம் வரை வெளியிடப்பட்ட கரண்ஸி நோட்டுகள் மற்றும் நாணயங்களையும், சேகரித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு புத்தகங்கள் , சிலைகள், இசைக் கருவிகள், ரிக்காட்டுகள் என்று எண்ணிலடங்காத சேகரிக்கும் பொருள்கள் (collector’s items) உள்ளன. சிகெரெட் லைட்டர்ஸ் (cigarette lighters) முதல், தீப்பெட்டிவரை (match boxes) சேகரிக்கும் பொருள்களாக உள்ளது. இப்பொருட்கள் சிலசமயம் மிகப்பெரும் தொகைக்கு இன்னொரு சேகரிப்போரால் (collector) வாங்கிக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட சேகரிப்போருக்கு மனஉள்திருப்தியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதுதான் கைமேல் கண்டபலன்.
இப்படிப்பட்ட ஷாப்பஹாலிக்குகளாய் இருந்தாலும், மற்றும் ஒரே வகையானவைகளை சேகரிப்பவராக இருந்தாலும் இஸ்லாம் இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
திருக்குர்ஆனில் வல்ல இறைவன் தன் உண்மையான அடியார்களைப் பற்றி கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறான்:
“மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்”  (அல்-குர்ஆன், அல்-ஃபுர்கான் 25:67)
இத்திருவசனத்திலிருந்து இறைவன் ‘வீண்விரயம் செய்வோரையும்’ ‘கஞ்சத்தனம் செய்வோரையும்’ தன் உண்மையான இறை நம்பிக்கையாளராய் ஏற்றுக்கொள்வதில்லை என்று கண்டோம்.
இன்னொரு திருவசனத்தில் அல்லாஹ் (சுப்ஹா…) கூறுகிறான்:
“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும், இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
‘ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை’ குறிப்பிடும் பொழுது அல்லாஹ் (சுப்ஹா…), ‘கையை முற்றிலும் விரித்துவிட்டவர்’ என்று உவமானத்தோடு குறிப்பிடுகின்றான். இவர்கள் முதலில் பழிப்பிற்குரியவர்களாகவும், பின்னர் எதுவும் கொடுக்க அல்லது வாங்க இயலாதவராகவும் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக காண்பதாகும்.
பிறிதொரு இறைவசனத்தில் ‘வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ என்று குறிப்பிட்டு ஷைத்தானாகவே அடையாளம் காட்டுகின்றான். அத்திருவசனம் பின்வருமாறு உள்ளது:
“உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
வீண் விரயம் செய்யாதீர்கள், அப்படி செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர் என்று கூறுவதற்கு முன்னர், இறைவன் தன் அடியானுக்கு கொடுத்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து உறவினர்களுக்கும், வரியவர்களுக்கும், மேலும் வழிப்போக்கர்களுக்கும் உரிய பங்கினை வழங்கிவிடுமாறு அறிவுரை பகர்கின்றான். இதில் கடமையாக்கப்பட்ட ஜக்காத்தும், உபரியாக செய்யும் தான தர்மங்களும் (ஸதகாவும்) அடங்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது செல்வ நிலைக்கேற்ப கணக்குப் பார்த்து ஜகாத்தும், அதற்கு மேலாக சதகாவும் வருடாவருடம் கொடுத்து வருவாரேயானால் அவரை இறைவன் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரனாக ஆவதைவிட்டும் பாதுகாப்பான்.
ஆனால் நிலைமை இன்று எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், அதிகமாக வீண் செலவு செய்பவர்கள் ஜக்காத் கொடுக்காதவர்களாகவும், மற்ற தானதர்மங்களைச் செய்யாதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் செல்வங்களையெல்லாம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், அலங்கார பொருட்களுக்கும் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் சாதனங்களுக்கும் செலவிடப்படுவதால் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு முஸ்லிமுக்கு தனது செலவுக்குப் போக மீதம் சேமித்த தொகை அவனிடம் ஒரு வருடம் பணமாகவோ அல்லது விற்பனைக்கு இருக்கும் நிலம் போன்றவைகளாகவோ இருந்தால் தான் ஜக்காத் கடமையாகிறது. ஆனால் தன் ஆடம்பரச் செலவுகளாலும் வீண் செலவுகளாலும் பணத்தை அழிக்கும் ஒருவர் ஜக்காத் கொடுக்க எப்படி முடியும்? அப்படி கொடுத்தாலும் மிகக்குறைவாகவே கொடுப்பார்; கணக்குப் பார்த்துக் கொடுக்கமாட்டார். ஆகையால் தான் அவரை ‘ஷைத்தானின் சகோதரராய்’ இறைவன் வர்ணிக்கின்றான்.
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறியாக இருப்பதால் இறைவன் தனது அடியானுக்கு – தன்மேல் நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனுக்கு – வீண் செலவு செய்தல் மற்றும் பொருள்களை வீண் விரயம் செய்வதை முற்றாக தடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை பகர்கின்றான். ஒரு முஸ்லிம் வீண்செலவை கட்டுப்படுத்திக் கொள்ள இந்த ஒரு அறிவுரையே போதும். ஒரு முஸ்லிம் ஊதாரித்தனமாய் வீண் செலவு செய்யாமலும், கஞ்சத்தனமாய் செலவு எதுவும் செய்யாமலும் இருக்கக்கூடாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் – மிதமாக செலவு செய்வதுதான் ஒரு முஸ்லிம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், ஏன் தன் நாட்டிற்கும் நன்மைகளை பெறமுடியும்.
வீண் செலவு செய்து தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவதில்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons