5 அக்., 2011

குழந்தை மருத்துவம் - தொகுப்பு




குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக கிடைக்கும் மருத்துவ கட்டுரைகள், ஆலோசனைகள், மற்றும் தகவல்களை இங்கே தொகுத்தளிக்க இருக்கிறேன். 

குழந்தைக்கு எது நல்லது?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
 

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
 

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
 

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
 

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
 

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
 

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
 

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

குழந்தை மருத்துவம் - தொகுப்பு




குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக கிடைக்கும் மருத்துவ கட்டுரைகள், ஆலோசனைகள், மற்றும் தகவல்களை இங்கே தொகுத்தளிக்க இருக்கிறேன். 

குழந்தைக்கு எது நல்லது?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
 

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
 

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
 

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
 

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
 

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
 

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
 

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்




(குழந்தை வளர்ப்பு)

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
 

குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
 
1
 

பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும்.
 

தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பர்சை தூர எறிவது போல பாவ்லா காட்டுவது வழக்கம். இதை கவனித்து வளர்ந்தது குழந்தை.
 

ஒருநாள் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தந்தையிடமிருந்த பர்சை எடுத்து சன்னல் வழியேவெளியே எறிந்து விட்டது.

குழந்தைகள் பெற்றோரின் செயல்களை உள்வாங்கி செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
 

குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும் அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் கோபமாகவும், எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அதையே கற்று வளரும்.
 

2
 

குழந்தைகளின் செயல்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மூன்று வயதான ஒரு குழந்தை உங்கள் இடத்திலிருந்து உங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
 

நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் தொந்தரவு செய்யாமல் போய் விளையாடு என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலை அந்த சிறு வயதிலேயே குழந்தைக்கு வாய்த்து விடுகிறது.
 

3
 

குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆறுமுறை பாராட்டினால் ஒரு முறை தவறை சுட்டிக் காட்டலாம் என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
 

அதிக எதிர்மறை கருத்துக்கள் குழந்தைகளைப் பாதிக்கும். ஆனால் பெற்றோர் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட திட்டுவது மேல் என்றே குழந்தைகள் நினைக்கின்றனவாம்.
 

குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தை ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைப்பது இதனால் தான். எப்படியேனும் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப வேண்டும் எனும் குழந்தையின் ஆதங்கம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
 

எனவே குழந்தையின் செயல்களை ஆழமாகக் கவனியுங்கள். ஒவ்வொரு சரியான செயலையும் தவறாமல் பாராட்டுங்கள்.
 

4
 

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு இறங்கிச் சென்று குழந்தையோடு குழந்தையாக உரையாடுவதே சிறந்தது. அவர்கள் தரையில் அமர்ந்தாலும், வெளியே மணலில் புரண்டாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள்.
 

குழந்தைகள் பேசுவதை கவனமுடன் கேட்டு பதிலளியுங்கள். அதை குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புகின்றனவாம். குழந்தைகளின் பேச்சுகள் கவனிக்கப்படாமல் போகும்போது அவை மனரீதியான பாதிப்பை அடைகிறதாம்
 

5
 

நீங்கள் கொடுக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். அது மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு உங்கள் வார்த்தைகளின் மீது நம்பிக்கை எழவும், உங்களிடம் குழந்தை பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும்.
 

வெறுமனே உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள். ‘ஒழுங்கா சாப்பிட்டா கடைக்குக் கூட்டிப் போகிறேன்’, ‘அமைதியா இருந்தா சாக்லேட் வாங்கி தரேன்’ என எது சொன்னாலும் அதை நிறைவேற்றுங்கள்.
 

நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனையில் நீங்கள் உறுதிமொழிகள் வழங்கும் போது உங்கள் உறுதிமொழிகளும் நேர்மையாய் இருக்கும். குழந்தைகளும் உங்களிடம் நம்பிக்கை வளர்க்கும்.
 

6
 

குழந்தைகளுக்கு சில பொருட்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கையில் கண்ணாடியைப் பிடுங்கி எறிவது குழந்தைக்குப் பிடிக்கும் என்றால் கண்ணாடியை மறைவாக வைத்திருக்க முயலுங்கள், முடிந்த மட்டும்.
 

7
 

உங்கள் குழந்தை ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டிருந்தால் அது உங்களைப் பாதிக்காதவரையில் கண்டு கொள்ளவேண்டாம். உங்கள் சட்டங்களை குழந்தைகளின் விளையாட்டில் வரையறை செய்ய வேண்டாம்.
 

குழந்தை ஒரு எறும்பை பின் தொடர்வதை பெரிதும் விரும்பினால் விட்டு விடுங்கள். அதை விடுத்து ‘அதெல்லாம் பண்ணாதே’ என்ற அதட்டல் தேவையில்லை.
 

குழந்தையின் போக்கில் குழந்தையை வளர விடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோருடன் அதிக கருத்து வேற்றுமை, மன வருத்தம் வருவதையும் தவிர்க்கும்.
 

8
 

குழந்தையிடம் ‘செய்யாதே’ என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனில் அதில் நீங்கள் உறுதியாய் இருங்கள். மனைவி ‘செய்யாதே’ என்று சொல்ல, கணவன் ‘செய்யட்டும் பரவாயில்லை’ என்று சொல்லி குழப்பாதீர்கள். சொல்ல வேண்டியதை நேரடியாகவும், எளிமையாகவும் சொல்லுங்கள்.
 

செய்யாதே என்று சொல்லப்படுவதைச் செய்வதில் எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாய் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 

சில விஷயங்களை குழந்தைகளின் தவறுகளிலிருந்து குழந்தைகளே கற்றுக் கொள்ளும். அதை தடுக்க வேண்டாம். வீட்டுப் பாடம் எழுத ஒரு நாள் மறந்தால், அதற்குரிய தண்டனை பெறட்டும். மறு நாளிலிருந்து நினைவில் வைத்திருப்பார்கள்.
 

9
 

குழந்தைகள் முக்கியமானவர்கள் எனும் நிலையை குடும்பங்களில் உருவாக்க மறக்க வேண்டாம். சற்று வளர்ந்த குழந்தைகளை வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்தாலோசிப்பதும், கலந்து பணிகளைச் செய்ய வைப்பதும் சிறந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், இருப்பையும் வலிமையாக்கும்.
 
கிண்டல், காயம் இல்லாத நகைச்சுவை உணர்வை குடும்பத்தில் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்து உண்பதும், சேர்ந்து சிரிப்பதும் பலமான குடும்ப உறவின் பாலங்க
 

10
 

குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென பள்ளித் தேர்வில் வரும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்க முடியாமல் முடங்கி விடுவார்கள்.
 

எனவே தோல்விகளையும் பழக்குங்கள். தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை எனும் தத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டியது அவசியம்.

குழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:




குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சூப், ஜுஸ், போன்றவைகளுக்குப் பதிலாக பச்சைக் காய்கறிகள் பழங்களை அதிகமாக சாப்பிடக் கொடுங்கள். இது நல்ல செரிமானத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 

எப்போதும் குழந்தைகளை விமர்சிக்கும் போது நெகடி
வ் அணுகுமுறையைக் கையாளாதீர்கள். அவர்களூடைய பலங்களை எடுத்து சொல்லி இன்னும் சிறப்பாக என்னென்ன செய்யலாம் , என்னென்னவற்றைத் தவிர்க்கலாம் என்று எடுத்து சொல்லி ஊக்கம் கொடுங்கள். 

அதே சமயத்தில் ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்துவது அவசியம் எ
ன்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை ஏதோ உலக சாதனை போல் புகழ்ந்து தள்ளாதீர்கள். உங்கள் பாராட்டு என்பது, தேவையான அளவிலான நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும். 

வீட்டில் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசாதீர்கள். குழந்தைகளும் அதையே பி
ன்பற்றுவார்கள். இது ரொம்ப தவறு. சக மாணவர்கள் தொடங்கி, எல்லோரிடமும் அன்பாய் இருக்கவும், அதே சமயம் மதிக்கவும் கற்றுத் தாருங்கள்.
குழந்தைகள் மட்டுமே குறிப் பிட்ட அறையை பயன்படுத்தினால், அந்த அறை வண்ணமயமாகக் காட்சி தர வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்தவை கலர் கலரான பொருட்கள். நம் ஆசைகளை சிறிது விலக்கி விட்டு, குழந்தைகள் ஆசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவரவர் குழந்தைகள் எதை விரும்புகின்றனரோ அந்த சூழலைத் தர நாம் முயற்சிக்கலாம். 

இதன் மூலம் குழந்தைகள் தங்களின் பாடங்களை அல்லது வேலைகளை குறிப்பிட்ட இடத்தில் செய்யப் பழகுவர்.
 

குழந்தைக்கு "கார்ட்டூன்' இஷ்டம் என்றால் அந்த படங்களைப் போடலாம்.
 

இயற்கையை விரும்பினால் அது சம்பந்தமான படங்களைப் போட்டு அழகுபடுத்தலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்ட குழந்தைகளை, விளையாட்டு வீரர்களின் படங்களைப் போட்டு அவர்களை மகிழ்விக்கலாம்.
 

இப்படியாக, குழந்தைகளின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தருவதன் மூலம் அதை தங்களின் அறையாக பாவித்து பாடங்களை கருத்துடன் படிக்க ஆரம்பிப்பர். படிப்பில் மட்டும் நாட்டம் கொண்ட குழந்தைகளாக இருந்தால் உலகப் படங்கள் போன்ற கல்வி சம்பந்தமான சாதனங்களை வைத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
 

ஓரளவு வசதியிருந்தால், இரண்டு குழந்தைகள் இருக்கும் அறையில் "பங்க் பெட்' என்று சொல்லக்கூடிய அடுக்குக் கட்டில் போன்ற அமைப்பைத் தரலாம். "டிரெயின்' பர்த் போல் ஆசையுடன் படுத்து உறங்குவர்.
 

குழந்தைகளுக்கென தனி ஷோகேஸ், ரீடிங் டேபிள், வார்டுரோப், லான் கார்ப்பெட் என அனைத்தும் கிடைக்கின்றன. தனி இடம் இருந்தாலும் அவரவர் பட்ஜெட் படி அமைத்துக் கொள்ளலாம்.
 

அலமாரிகளில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, கதைப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள், தினமும் பயன்படுத்தும் துணிகள், புதிய துணிகள், யூனிபார்ம் வகைகள் என்று பிரித்து தனித் தனியாக அடுக்கித் தரலாம். இதன் மூலம் அறை வெளியில் மட்டுமல்லாமல், அலமாரியின் உள்ளேயும் திறக்கும் பொழுதெல்லாம் அழகாக சுத்தமாக இருக்கும்.
 

இடம் சிறியதாக இருப்பவர்கள் இதுபோல் பல்வேறு வேலைகளை ஒரே இடத்தில் வசதியுடன் செய்வதோடு கலையம்சத்தையும் காட்ட முடியும்.
 

ஒரு சிறிய அறையை பேச்சலர்ஸ் ரூமாக, குழந்தைகள் அறையாக, ரீடிங் ரூமாக, ஆபீஸ் ரூமாக அமைப்பதுடன் விருந்தினர் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

நம் வீட்டின் அமைப்பு, நம் குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் அமைகிறது. என்றோ வரும் விருந்தினர்களை நாம் கணக்கிட முடியாது. அனைத்து அம்சங்களும் கொண்ட அறையில், இரண்டு அல்லது மூன்று குஷன் மற்றும் நல்ல கவர்கள், நல்ல தரமான படுக்கை விரிப்புகள் கைவசம் வைத்துக் கொண்டால் போதும். எப்பொழுது விருந்தினர் வந்தாலும் ரெடிமேட் "பெட்' தந்து விடலாம். கீழே ஒரு சிறிய ஜமக் காளம், அதன் மேல் ஒரு மெத்தை, நல்ல ஒரு "சாடின்' விரிப்பை போட்டு விட்டு இரண்டு அதே கலர் கவர் போட்ட குஷன்களை வைத்தால் போதும். பகலில் உட்காரவும், இரவில் படுக்கவும் பயன்படுத்தலாம்.
 

இதேபோல் இட வசதியோ, போதிய பண வசதியோ இல்லாதவர்கள் நல்ல "ஐடியா'வுடன் ரசனையோடு செயல்பட் டால் எந்த இடத்தையும் சுத்தமாக அழகாகக் காட்ட முடியும்.
 

1) குழந்தைகள் அறையில் மருந்து, மாத்திரைகளை கைக்கு எட் டாத இடத்தில் வைப்பது நல்லது.
 

2) கேசட், "சிடி' போன்றவைகளை ஒரு ஸ்டாண்டு வாங்கித் தந்து சிறிய குழந்தைகளை அடுக்கச் செய்து பழக்கினால் சிறு வயதிலேயே அவர்கள் பொருட்களை சரிவர வைக்கக் கற்றுக் கொள்வர்.
 

3) படிக்கும் குழந்தைகள் வாரம் ஒருமுறை தன் அலமாரிகளை தானே துடைத்து பொருட் களை அடுக்கவும், புத்தகங் களை வரிசைப் படுத்தவும் சொல்லித் தரலாம்

குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்




(குழந்தை வளர்ப்பு)

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
 

குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
 
1
 

பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும்.
 

தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பர்சை தூர எறிவது போல பாவ்லா காட்டுவது வழக்கம். இதை கவனித்து வளர்ந்தது குழந்தை.
 

ஒருநாள் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தந்தையிடமிருந்த பர்சை எடுத்து சன்னல் வழியேவெளியே எறிந்து விட்டது.

குழந்தைகள் பெற்றோரின் செயல்களை உள்வாங்கி செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
 

குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும் அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் கோபமாகவும், எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அதையே கற்று வளரும்.
 

2
 

குழந்தைகளின் செயல்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மூன்று வயதான ஒரு குழந்தை உங்கள் இடத்திலிருந்து உங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
 

நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் தொந்தரவு செய்யாமல் போய் விளையாடு என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலை அந்த சிறு வயதிலேயே குழந்தைக்கு வாய்த்து விடுகிறது.
 

3
 

குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆறுமுறை பாராட்டினால் ஒரு முறை தவறை சுட்டிக் காட்டலாம் என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
 

அதிக எதிர்மறை கருத்துக்கள் குழந்தைகளைப் பாதிக்கும். ஆனால் பெற்றோர் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட திட்டுவது மேல் என்றே குழந்தைகள் நினைக்கின்றனவாம்.
 

குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தை ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைப்பது இதனால் தான். எப்படியேனும் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப வேண்டும் எனும் குழந்தையின் ஆதங்கம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
 

எனவே குழந்தையின் செயல்களை ஆழமாகக் கவனியுங்கள். ஒவ்வொரு சரியான செயலையும் தவறாமல் பாராட்டுங்கள்.
 

4
 

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு இறங்கிச் சென்று குழந்தையோடு குழந்தையாக உரையாடுவதே சிறந்தது. அவர்கள் தரையில் அமர்ந்தாலும், வெளியே மணலில் புரண்டாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள்.
 

குழந்தைகள் பேசுவதை கவனமுடன் கேட்டு பதிலளியுங்கள். அதை குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புகின்றனவாம். குழந்தைகளின் பேச்சுகள் கவனிக்கப்படாமல் போகும்போது அவை மனரீதியான பாதிப்பை அடைகிறதாம்
 

5
 

நீங்கள் கொடுக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். அது மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு உங்கள் வார்த்தைகளின் மீது நம்பிக்கை எழவும், உங்களிடம் குழந்தை பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும்.
 

வெறுமனே உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள். ‘ஒழுங்கா சாப்பிட்டா கடைக்குக் கூட்டிப் போகிறேன்’, ‘அமைதியா இருந்தா சாக்லேட் வாங்கி தரேன்’ என எது சொன்னாலும் அதை நிறைவேற்றுங்கள்.
 

நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனையில் நீங்கள் உறுதிமொழிகள் வழங்கும் போது உங்கள் உறுதிமொழிகளும் நேர்மையாய் இருக்கும். குழந்தைகளும் உங்களிடம் நம்பிக்கை வளர்க்கும்.
 

6
 

குழந்தைகளுக்கு சில பொருட்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கையில் கண்ணாடியைப் பிடுங்கி எறிவது குழந்தைக்குப் பிடிக்கும் என்றால் கண்ணாடியை மறைவாக வைத்திருக்க முயலுங்கள், முடிந்த மட்டும்.
 

7
 

உங்கள் குழந்தை ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டிருந்தால் அது உங்களைப் பாதிக்காதவரையில் கண்டு கொள்ளவேண்டாம். உங்கள் சட்டங்களை குழந்தைகளின் விளையாட்டில் வரையறை செய்ய வேண்டாம்.
 

குழந்தை ஒரு எறும்பை பின் தொடர்வதை பெரிதும் விரும்பினால் விட்டு விடுங்கள். அதை விடுத்து ‘அதெல்லாம் பண்ணாதே’ என்ற அதட்டல் தேவையில்லை.
 

குழந்தையின் போக்கில் குழந்தையை வளர விடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோருடன் அதிக கருத்து வேற்றுமை, மன வருத்தம் வருவதையும் தவிர்க்கும்.
 

8
 

குழந்தையிடம் ‘செய்யாதே’ என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனில் அதில் நீங்கள் உறுதியாய் இருங்கள். மனைவி ‘செய்யாதே’ என்று சொல்ல, கணவன் ‘செய்யட்டும் பரவாயில்லை’ என்று சொல்லி குழப்பாதீர்கள். சொல்ல வேண்டியதை நேரடியாகவும், எளிமையாகவும் சொல்லுங்கள்.
 

செய்யாதே என்று சொல்லப்படுவதைச் செய்வதில் எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாய் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 

சில விஷயங்களை குழந்தைகளின் தவறுகளிலிருந்து குழந்தைகளே கற்றுக் கொள்ளும். அதை தடுக்க வேண்டாம். வீட்டுப் பாடம் எழுத ஒரு நாள் மறந்தால், அதற்குரிய தண்டனை பெறட்டும். மறு நாளிலிருந்து நினைவில் வைத்திருப்பார்கள்.
 

9
 

குழந்தைகள் முக்கியமானவர்கள் எனும் நிலையை குடும்பங்களில் உருவாக்க மறக்க வேண்டாம். சற்று வளர்ந்த குழந்தைகளை வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்தாலோசிப்பதும், கலந்து பணிகளைச் செய்ய வைப்பதும் சிறந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், இருப்பையும் வலிமையாக்கும்.
 
கிண்டல், காயம் இல்லாத நகைச்சுவை உணர்வை குடும்பத்தில் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்து உண்பதும், சேர்ந்து சிரிப்பதும் பலமான குடும்ப உறவின் பாலங்க
 

10
 

குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென பள்ளித் தேர்வில் வரும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்க முடியாமல் முடங்கி விடுவார்கள்.
 

எனவே தோல்விகளையும் பழக்குங்கள். தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை எனும் தத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டியது அவசியம்.

குழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:




குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சூப், ஜுஸ், போன்றவைகளுக்குப் பதிலாக பச்சைக் காய்கறிகள் பழங்களை அதிகமாக சாப்பிடக் கொடுங்கள். இது நல்ல செரிமானத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 

எப்போதும் குழந்தைகளை விமர்சிக்கும் போது நெகடி
வ் அணுகுமுறையைக் கையாளாதீர்கள். அவர்களூடைய பலங்களை எடுத்து சொல்லி இன்னும் சிறப்பாக என்னென்ன செய்யலாம் , என்னென்னவற்றைத் தவிர்க்கலாம் என்று எடுத்து சொல்லி ஊக்கம் கொடுங்கள். 

அதே சமயத்தில் ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்துவது அவசியம் எ
ன்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை ஏதோ உலக சாதனை போல் புகழ்ந்து தள்ளாதீர்கள். உங்கள் பாராட்டு என்பது, தேவையான அளவிலான நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும். 

வீட்டில் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசாதீர்கள். குழந்தைகளும் அதையே பி
ன்பற்றுவார்கள். இது ரொம்ப தவறு. சக மாணவர்கள் தொடங்கி, எல்லோரிடமும் அன்பாய் இருக்கவும், அதே சமயம் மதிக்கவும் கற்றுத் தாருங்கள்.
குழந்தைகள் மட்டுமே குறிப் பிட்ட அறையை பயன்படுத்தினால், அந்த அறை வண்ணமயமாகக் காட்சி தர வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்தவை கலர் கலரான பொருட்கள். நம் ஆசைகளை சிறிது விலக்கி விட்டு, குழந்தைகள் ஆசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவரவர் குழந்தைகள் எதை விரும்புகின்றனரோ அந்த சூழலைத் தர நாம் முயற்சிக்கலாம். 

இதன் மூலம் குழந்தைகள் தங்களின் பாடங்களை அல்லது வேலைகளை குறிப்பிட்ட இடத்தில் செய்யப் பழகுவர்.
 

குழந்தைக்கு "கார்ட்டூன்' இஷ்டம் என்றால் அந்த படங்களைப் போடலாம்.
 

இயற்கையை விரும்பினால் அது சம்பந்தமான படங்களைப் போட்டு அழகுபடுத்தலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்ட குழந்தைகளை, விளையாட்டு வீரர்களின் படங்களைப் போட்டு அவர்களை மகிழ்விக்கலாம்.
 

இப்படியாக, குழந்தைகளின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தருவதன் மூலம் அதை தங்களின் அறையாக பாவித்து பாடங்களை கருத்துடன் படிக்க ஆரம்பிப்பர். படிப்பில் மட்டும் நாட்டம் கொண்ட குழந்தைகளாக இருந்தால் உலகப் படங்கள் போன்ற கல்வி சம்பந்தமான சாதனங்களை வைத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
 

ஓரளவு வசதியிருந்தால், இரண்டு குழந்தைகள் இருக்கும் அறையில் "பங்க் பெட்' என்று சொல்லக்கூடிய அடுக்குக் கட்டில் போன்ற அமைப்பைத் தரலாம். "டிரெயின்' பர்த் போல் ஆசையுடன் படுத்து உறங்குவர்.
 

குழந்தைகளுக்கென தனி ஷோகேஸ், ரீடிங் டேபிள், வார்டுரோப், லான் கார்ப்பெட் என அனைத்தும் கிடைக்கின்றன. தனி இடம் இருந்தாலும் அவரவர் பட்ஜெட் படி அமைத்துக் கொள்ளலாம்.
 

அலமாரிகளில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, கதைப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள், தினமும் பயன்படுத்தும் துணிகள், புதிய துணிகள், யூனிபார்ம் வகைகள் என்று பிரித்து தனித் தனியாக அடுக்கித் தரலாம். இதன் மூலம் அறை வெளியில் மட்டுமல்லாமல், அலமாரியின் உள்ளேயும் திறக்கும் பொழுதெல்லாம் அழகாக சுத்தமாக இருக்கும்.
 

இடம் சிறியதாக இருப்பவர்கள் இதுபோல் பல்வேறு வேலைகளை ஒரே இடத்தில் வசதியுடன் செய்வதோடு கலையம்சத்தையும் காட்ட முடியும்.
 

ஒரு சிறிய அறையை பேச்சலர்ஸ் ரூமாக, குழந்தைகள் அறையாக, ரீடிங் ரூமாக, ஆபீஸ் ரூமாக அமைப்பதுடன் விருந்தினர் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

நம் வீட்டின் அமைப்பு, நம் குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் அமைகிறது. என்றோ வரும் விருந்தினர்களை நாம் கணக்கிட முடியாது. அனைத்து அம்சங்களும் கொண்ட அறையில், இரண்டு அல்லது மூன்று குஷன் மற்றும் நல்ல கவர்கள், நல்ல தரமான படுக்கை விரிப்புகள் கைவசம் வைத்துக் கொண்டால் போதும். எப்பொழுது விருந்தினர் வந்தாலும் ரெடிமேட் "பெட்' தந்து விடலாம். கீழே ஒரு சிறிய ஜமக் காளம், அதன் மேல் ஒரு மெத்தை, நல்ல ஒரு "சாடின்' விரிப்பை போட்டு விட்டு இரண்டு அதே கலர் கவர் போட்ட குஷன்களை வைத்தால் போதும். பகலில் உட்காரவும், இரவில் படுக்கவும் பயன்படுத்தலாம்.
 

இதேபோல் இட வசதியோ, போதிய பண வசதியோ இல்லாதவர்கள் நல்ல "ஐடியா'வுடன் ரசனையோடு செயல்பட் டால் எந்த இடத்தையும் சுத்தமாக அழகாகக் காட்ட முடியும்.
 

1) குழந்தைகள் அறையில் மருந்து, மாத்திரைகளை கைக்கு எட் டாத இடத்தில் வைப்பது நல்லது.
 

2) கேசட், "சிடி' போன்றவைகளை ஒரு ஸ்டாண்டு வாங்கித் தந்து சிறிய குழந்தைகளை அடுக்கச் செய்து பழக்கினால் சிறு வயதிலேயே அவர்கள் பொருட்களை சரிவர வைக்கக் கற்றுக் கொள்வர்.
 

3) படிக்கும் குழந்தைகள் வாரம் ஒருமுறை தன் அலமாரிகளை தானே துடைத்து பொருட் களை அடுக்கவும், புத்தகங் களை வரிசைப் படுத்தவும் சொல்லித் தரலாம்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons