13 நவ., 2010

மர்பி விதிகள் 1426-1450


1426. நீங்கள் இப்போது எடுத்து சுவைக்க நினைக்கும் மிட்டாய் கைப்பைக்கு அடியிலேயே கிடக்கும்.

1427. எப்போது இரண்டு மனிதர்கள் இணைந்து மூன்றாம் மனிதனின் பணத்தை எப்படிக் கையாளவது என்று திட்டமிட்டுப் பேச ஆரம்பிக்கின்றார்களோ, அப்போது தான் மோசடி உருவாகின்றது.

1428. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவருக்கு எது நன்றாகத் தெரியும் என்று காட்டிக் கொள்கின்றாரோ, அந்த வேலையைத் தராமல் இருப்பதே நிறுவனத்துக்கு நல்லது.

1429. எவர் அதிக லாட்டரிச் சீட்டு வாங்குகின்றாரோ, அவருக்குத் தான் பரிசே விழாது!

1430. அனைத்து நல்லவைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன! (அப்போ மீதம் நமக்கு இருப்பது?
1431. ஒரு பொருள் சுத்தமாக இருக்க வேண்டுமாயின் இன்னொரு பொருள் அசுத்தமாக வேண்டும்.

1432. எந்தப் பொருளும் சுத்தமாக்காமலேயே அத்தனை பொருட்களையும் அசுத்தமாக்க முடியும்!

1433. ஒரு கூட்டத்தில் எதைச் சொல்லக் கூடாதோ, அதைச் சொல்வதற்கும் ஒருவர் இருப்பார்.

1434. உங்கள் காரில் மட்டும் சின்ன பழுது வரவே வராது.

1435. ஏசியோடு தூசியில்லாமல் இருந்தாலும், கணினி இயங்காமல் போகும்!

1436. ஒரு நிர்வாகத்தின் முதல் மூடநம்பிக்கை அது இருக்கின்றது என்று நினைப்பது தான்.

1437. ஒரு நிர்வாகத்தின் இரண்டாம் மூடநம்பிக்கை அதன் வெற்றி நிர்வாகத்தில் இருப்போரின் திறமையால் ஏற்படுகின்றது என்பது தான்.

1438. எந்த நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்று யாருக்கும் தெரியவில்லையோ, அந்த நிர்வாகமே வெற்றி பெறும்!

1439. எதற்காவது காத்திருந்தால் அது கிடைக்காமல் போயே விடும்.

1440. எதற்காவது காத்திருந்தால் அது கிடைக்காமல் போவது மட்டுமின்றி தேவையான சேதாரத்தையும் உண்டு பண்ணி விட்டே போகும்.
1441. உலகில் எந்த ஒரு நல்ல விஷயம் நடக்கும் முன் ஒரு கெட்ட விஷயம் நடந்தே தீரும்.

1442. நல்ல விஷயமா? அப்படி ஒன்று நடக்கும் என்று யார் சொன்னது?

1443. ஒரு சிறு முட்டாள்தனம் வெகு தூரம் பயணிக்கும்!

1444. நகர்ந்து கொண்டு ஒரு பொருள் இருக்குமாயின் அதன் பயணம் தவறான பாதையிலேயே இருக்கும்.

1445. நகராமல் ஒரு பொருள் இருக்குமாயின் அது தவறான இடத்திலேயே இருக்கும்.

1446. நத்தைக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள ஒரே ஒரு வேற்றுமை, நத்தை அதன் எச்சிலை பின்புறம் விட்டுச் செல்லும்.

1447. கணினிகளை நம்ப முடியாது தான். ஆனால் மனிதர்களை அதை விடவும் நம்ப முடியாது.

1448. யாராவது கணினியைக் குற்றம் சொன்னால், அதன் பின்னர் இருவர் இருப்பார்கள். ஒருவர் அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பாளி. மற்றொருவர் குற்றம் சொன்னவர் தான். 

1449. எந்த ஒரு இயந்திரம் மனிதனை நம்பி இருக்கின்றதோ அதை நம்ப முடியாது.

1450. தவறுகளைத் தவிர்க்கும் நம்பகத்தன்மைக்காகச் செலவிடும் முதலீடு, தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தை விட அதிகமான பின்னரே வேலை செய்ய ஆரம்பிக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons