12 நவ., 2010

மர்பி விதிகள் 21-40


21. உங்களுக்கு ஒரு கடன் கிடைக்க வேண்டுமானால் அது உங்களுக்கு தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்.

22. அது சிக்கிக் கொண்டால் அழுத்தம் கொடுங்கள். உடைந்து விட்டால்?! எப்படியும் மாற்றத் தானே போகிறீர்கள்! ஹி ஹி.

23. ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும் போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்!

24. எந்த ஒரு முட்டாளும் கூட பயனடையுமாறு ஒரு விஷயத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் முட்டாள்கள் மட்டுமே அதில் பயன் பெற முடியும்.

25. எல்லொரிடமும் பணக்காரனாவதற்கான வழிமுறை இருக்கிறது. ஆனால் அது பயன் மட்டும் தராது!

26. முட்டாள்களுடன் விவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். பார்ப்பவர்களுக்கு (யார் முட்டாள் என்று) வித்தியாசம் தெரியாமல் போய் விடும்.

27. நீங்கள் எந்த விளையாட்டில் நன்றாக விளையாடினாலும் அது தனியாக விளையாடும் போது மட்டுமே நிகழும்.

28. நீங்கள் யாரைக் கவுக்க வேண்டும் (?!) என்று நினைத்து விளையாடிக் காட்டுகிறீர்களோ அப்போது தான் தப்பாக விளையாடுவீர்கள்.

29. நீங்கள் செய்யும் அரிய பெரிய கண்டுபிடிப்புகள் உடனே மறந்து போகும். உப்புக்குச் சப்பான விசயங்கள் மறப்பதே இல்லை.

30. நீங்கள் எவ்வளவு தாமதமாகச் செல்கிறீர்களோ அவ்வளவே தான் நெரிசலும் இருக்கும்.

31. நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்துகொள்வீர்களோ அவ்வளவு தூரம் அனைவரும் கவனிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.

32. தபால் பெட்டி எப்போதுமே சாலையின் மறுபுறத்தில் தான் இருக்கும்.

33. நீங்கள் பட்டங்களை வேண்டுமானால் வாங்கலாம். மூளையை வாங்க முடியாது.

34. குழப்பங்கள் நேர்த்தியாக இருப்பதனால் எப்போதுமே வெற்றியடைகின்றன.

35. நீங்கள் புது செருப்பு அணியும் போது தான் அனைவரும் அதை மிதித்து அழுக்காக்குவார்கள்.

36. எது செய்தாலும் நடக்கவில்லையா? சுத்தியலுக்கு வேலை வந்து விட்டது என்று அர்த்தம்.

37. நீங்கள் எந்த விதிகளை முழுமையும் படித்து முடிக்கிறீர்களோ உடனே அது மாற்றப்பட்டிருக்கும்.

38. எந்த ஒரு வேலையையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிப்பதற்கான வழி தென்படும்.

39. காற்று எப்போதுமே உங்கள் விக்குக்கு எதிர்புறமாகவே வீசும்.

40. ஒரு கண்ணாடி ஜன்னலில் அழுக்கு இருப்பதாகத் துடைத்தால் அது ஜன்னலின் மறுபுறத்தில் தான் இருக்கும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons