1 நவ., 2011

உங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா??



செல்பேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்னசெய்வது என தெரியாமல் பெரும்பாலும் வெயிலில் வைப்பது, லைட் கீழே வைப்பது, சிலர் இன்னும் முன்னேறி அடுப்படியில் வைத்து காய வைப்பது என சரியாக தவறு செய்வார்கள். 
செல்பேசி தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யவேண்டும்??
தண்ணீரில் விழுந்த போனை எடுத்து பேட்டரியை உடனே கழட்டிவிட வேண்டும். ஏனெனில் ஈரமான செல்பேசியின் பாகங்கள் சாட்சர்க்யூட் ஆகி போன் மேலும் டேமேஜ் ஆகாமல் இருக்கும். 
பேசியை எவ்வளவு கழற்ற முடியுமோ அவ்வளவு கழற்றி வெள்ளையான காட்டன் துணியை வைத்து துடையுங்கள்.
பின் மெலிதாக வெப்பம் வரும் இடமாக பார்த்து காயவைக்க வேண்டும். நேரடியாக வெயிலில் வைக்க கூடாது. நிழலில் உலர்த்துங்கள். அடுப்படியும் வேண்டாம்.
 
அவ்வளவு தான் நீங்கள் செய்ய முடியும். மறுபடி பழைய மாதிரி பேசியை பூட்டி இயக்கி பாருங்கள். இயங்கினால் லாபம். இல்லாவிட்டால் போ வாங்கிய தொகையில் 5 சதவீதம் தொகையை தயார் செய்து கொள்ளுங்கள். ரிப்பேர் கடையில் ரிப்பேர் செய்யதான். முடிந்த அளவு தனியார் சர்வீஸ் சென்டர்களை நாடுங்கள். கம்பெனி சர்வீஸ் சென்டர்களில் தரமாக இருந்தாலும் விலை நியாயமாக இருக்காது. (ஏசி பில்லை யார் கட்டுவது??)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons