5 அக்., 2011

குளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந்தைகளே... உஷார்




குழந்தைகள் அதிகளவில் குளிர்பானங்கள் குடிப்பது பெரும் ஆபத்தை ஏற் படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் டின்களில் அடைத்து குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. இதே போல, ஜாம், பழச்சாறுகளும் பாட்டில்கள் மற்றும் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன.இவை நாள் கணக்கில் ஸ்டாக் வைத்து விற்கப்படுகின்றன. எனவே, இவை ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் கெட்டுப் போகாமல் தடுக்க, சோடியம் பென்சோயேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. 

இந்த ரசாயனம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இது குறித்து ஆய்வு நடத்திய பீட்டர் பைப்பர் என்ற விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பீட்டர் பைப்பர் கூறியதாவது,குளிர்பானம் மற்றும் உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் தடுப்பதற்காக சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை டி.என்.ஏ., அணுக்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா என்ற பகுதியை பாதிக்கின்றன. மைட்டோகாண்ட்ரியா தான் இந்த அணுக்களுக்கு ஆக்சிஜன் பெற்றுத் தருகிறது. இவை கடுமையாக பாதிக் கப்படும் போது, டி.என்.ஏ., அணுக் களை முடக்கிவிடும். இதனால், பார் கின் சன்ஸ் மற்றும் நரம்பு தொடர் பான கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும். சோடியம் பென்சோயேட், கல்லீரலையும் பாதிக்கக்கூடியது.
 

சோடியம் பென்சோயேட் குறித்து ஐரோப்பிய யூனியனிலும், அமெரிக்காவிலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய ஆய்வுகள் மிகப் பழமையானவை. தற்போதைய நவீன ஆராய்ச்சி முறையில் பரிசோதிக்கும் போது தான், அந்த பழைய ஆய்வுகள், போதுமான பாதுகாப்பு கொண்டது அல்ல என்பது தெரிய வந்துள்ளது.பெரியவர்களை விட, குழந்தைகள் அதிகளவில் இத்தகைய குளிர்பானங்கள், ஜாம் மற்றும் பழச்சாறுகளை அதிகளவில் விரும்பி சாப் பிடுகின்றனர். அதிகளவில் இவற்றை உட் கொள்ளும் போது எதிர்காலத்தில் கடுமையான நோய்களுக்கு அவர்கள் ஆளாகக் கூடும். அந்த குழந்தைகளை நினைத்தால் தான் எனக்கு கவலையளிக்கிறது.இவ்வாறு பீட்டர் பைப்பர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons