25 பிப்., 2012

பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள்




சிறு சிறு குறிப்புகள் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பதற்கும், சமையலில் சுவை கூட்டுவதற்கும், உடல்நலத்தை பாதுகாப்பதற்கும் உதவுகின்றன.

அவற்றில் சிலவற்றைப் இப்போது பார்ப்போம்.

பட்டுப் புடவைகள் மடிக்கும் போது ஜரிகையை உள்புறம் வைத்து மடித்தால் ஜரிகை கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.

வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு கற்பூரம் போட்டு வைத்தால் நகைகள் கறுக்காது.

வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பூக்கள் தூசியாக இருந்தால், பூவையும், உப்பையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குலுக்கினால் புதியது போல் ஆகிவிடும்.

உடல் பருமன் குறைய உணவில் அடிக்கடி கொள்ளுப்பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து காலில் உள்ள சேற்றுப்புண் மீது தடவி வந்தால் குணமாகும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும் ஒரு ஸ்பூன் மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.

துவையல்களை அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

காலிஃப்ளவரை சமைப்பதற்கு முன் வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் புழுக்கள் அழிவதுடன் காலிஃப்ளவரும் வெண்மையாக இருக்கும்.

தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நடைபெறும்.

துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons