20 நவ., 2010

பழமொழி' கலாய்ப்புகள்!

 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!
- இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது?
 வேலிக்கு ஓணான் சாட்சி!
- இதெல்லாம் ரொம்ம ஓவர். எந்த ஓணான் கோர்ட் படியேறி சாட்சி சொல்லியிருக்கு?
 தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை!
- ஏன் தகப்பனை போல பிள்ளையே கிடையாதா? நூல் மாதிரி சேலை இருந்தா யாரு கட்டுவாங்க ரோம்ப அடுக்குறாங்கப்பா!
 ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
- பானைக்கு சரி! குக்கர், ரைஸ் குக்கர் இதுக்கெல்லாம் எப்படி? பதத்தை அதுவே பாத்துக்கும்! பானையை கொஞ்சம் கவுத்து வைங்க!
 சின்ன புள்ள வெள்ளாமை வந்து சேராது!
- தெரியுதுல்ல... அப்புறம் எதுக்கு குழந்தை தொழிலாளர் முறை? படிக்க வைங்கய்யா!
 தென்னைய பெத்தா இளநீரு! பிள்ளைய பெத்தா கண்ணீரு!!
- பெறவேண்டியதுதானே..! தென்னை வந்து பொறந்து வளர்ந்து இளநீரு குடுக்கும்! ஆகுற பேச்சை பேசுங்க! கண்ணீரு... நம்ம பரம்பரை சொத்து! வருத்தப்படாத பெருசு... நாங்கதான் பொறப்போம்!
 சேரிடம் அறிந்து சேர்!
சொல்லீட்டீங்க! சரியான காலேஜா பார்த்துதான் சேர்றோம்! ம்... வேலைதான் சேர முடியலே தலைவா!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons